Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 104 கிலோ குட்கா பறிமுதல்கிருஷ்ணகிரியில் 2 பேர் கைது :

கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 104 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி டவுன் ராசுவீதி பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நகர காவல் ஆய்வாளர் கபிலன், எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீஸார் நேற்று அக்கடையில் சோதனை நடத்தினர்.

இதில் தடை செய்யப்பட்ட 104 கிலோ புகையிலைப் பொருட்கள் கடையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம். குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியைச் சேர்ந்த மங்களராம் (25), அவரது தம்பி மகேந்தர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வாங்கிவந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x