Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

வரிச்சியூர் அரசு பள்ளியில் மூலிகைத்தோட்டம் :

மதுரை

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் மூலிகைச் செடிகளை நட்டு தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அ.மகாலிங்கம், மேலூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் வெங்கட்ராமன், பள்ளி உதவி தலைமையாசிரியை கோவிந்தம்மாள், பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் செய்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x