Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

மருதுபாண்டியர் கல்லூரியில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, நபார்டு வங்கி மற்றும் கல்லூரியின் வணிகவியல்துறை இணைந்து நடத்திய நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டி யன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா மற்றும் ஆய்வியல் புலத் தலைவர் ஜி.அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.தமிழ்நங்கை, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜெ.பழனீஸ்வரி, தஞ்சாவூர் நபார்டு வங்கியின் மேலாளர் கே.பாலமுருகன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் எஸ்.வரதராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் ரா.தங்கராஜ் வரவேற்றார். இறுதியாக, வணிக மேலாண்மை துறைத் தலைவர் டி.வித்யா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x