Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM

யூடியூபர் மாரிதாஸ் உத்தமபாளையம் சிறையில் அடைப்பு :

மதுரை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ் (43). இவர், குன்னூர் விபத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் இறந்த சம்பவத்தில் தீவிரவாத சதி இருக்கலாம் என சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.

இதுகுறித்து மதுரை மாநகர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து புதூர் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து மாரிதாஸை கைது செய்தனர். பின்னர் அவர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

யூடியூபர் மாரிதாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தனக்கு ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் அவரது தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x