கல்வி உதவித்தொகை பெற பெற்றோர் வருமான உச்சவரம்பு உயர்வு  :

கல்வி உதவித்தொகை பெற பெற்றோர் வருமான உச்சவரம்பு உயர்வு :

Published on

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம், என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in