குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது :

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது  :
Updated on
1 min read

கோவை மாவட்டம் மதுக்கரைகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் ரமேஷ் என்பவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுக்கரை காவல்துறையினர், மதுக்கரை போடிபாளையத்தைச் சேர்ந்த ரகுகிருஷ்ணன் என்ற ரகுபதி (20) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரமேஷ் கொலை வழக்கில்கைதான ரகுகிருஷ்ணனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில்அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் பரிந்துரைத்தார். அதன்பேரில் ஆட்சியரும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ரகுகிருஷ்ணன் குண்டர்கள் தடுப்புப்பிரிவில் நேற்று அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in