கோயம்பேட்டில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு :

கோயம்பேட்டில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு :
Updated on
1 min read

கொளத்தூரைச் சேர்ந்தவர் புகழ் (38). இவர் கோயம்பேட்டில் கூலி வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு, பாடி குப்பத்தில் செல்லும் தரைப்பாலம்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆற்றில் வேகமாக ஓடும் வெள்ளத்தில் கால் இடறி கீழே விழுந்தார். நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆற்றின் நடுவே நின்றிருந்த முள் மரத்தின் கிளையைப் பிடித்தவாறு இரவு முழுவதும் கூச்சலிட்டுள்ளார். இரவு என்பதால் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாகச்சென்றவர்கள் அவரைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் புகழை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in