Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

திண்டுக்கல் அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழப்பு மூன்றாக உயர்ந்தது :

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ், விட்டல்நாயக்கன்ட்டி அருகே முன்னால் சென்ற பேருந்து மீது மோதியதில் வீரக்குமார், பழனிச்சாமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த நடராஜன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரை சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நடராஜன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x