Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

ஆசிரியைக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சந்திரன்(52) என்பவர், ஒரு பள்ளி ஆசிரியைக்கு மொபைல் போன் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில், சத்திரகுடி போலீஸார் ஆசிரியர் சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x