Published : 13 Nov 2021 03:08 AM
Last Updated : 13 Nov 2021 03:08 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் - பயிர் காப்பீடு திட்டத்தில் 15-ம் தேதி வரை சேரலாம் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி 2021-22 பருவத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய அனைத்து விவசாயிகளும் வரும் 15-ம் தேதிக்குள் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி 2021-22 பருவத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய விரும்பி, நாடி வரும் அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறாதோர்) பயிர் காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற, ஏதுவாக மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச் சேவை மையங்கள் வங்கி விடுமுறை நாட்களான இன்று (13-ம் தேதி) மற்றும் நாளை(14-ம் தேதி) ஆகிய இரு நாட்களும் திறந்திருந்து செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு நாட்களும் விவசாயிகள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் காப்பீட்டு பிரீமியத் தொகையினை செலுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x