தஞ்சை பெரிய கோயில் - உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை :

தஞ்சை பெரிய கோயில்  -  உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை :
Updated on
1 min read

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், கருவூரார் சித்தர், விநாயகர், முருகன் சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.12,05,624 ரொக்கம், 61 கிராம் தங்க நகைகள், 272 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் உமாராணி, மேற் பார்வையாளர் ரெங்கராஜன் முன்னி லையில் காணிக்கை எண்ணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in