32 முகாம்களில் 900 பேர் தஞ்சம் :

32 முகாம்களில் 900 பேர் தஞ்சம் :
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 32 முகாம்கள் அவற்றில் 900 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுராந்தகம் ஏரி, உத்திரமேரூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 685 பேர் தங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மொத்தம் 215 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த 9 முகாம்களில் 11 வயதுக்கு உட்பட்ட 47 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in