பட்டாசு ஆலை விபத்தில் - இறந்தவர்களின் உறவினர்கள் அரசு வேலை கேட்டு வழக்கு :

பட்டாசு ஆலை விபத்தில் -  இறந்தவர்களின் உறவினர்கள் அரசு வேலை கேட்டு வழக்கு :
Updated on
1 min read

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசு வேலை, இழப்பீடு கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் சிப்பிப்பாறையைச் சேர்ந்த சிவ பாலசுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட 6 பேர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை யில் கடந்தாண்டு மார்ச் 20-ல் நிகழ்ந்த வெடிவிபத்தில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.

பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந் தனர்.

அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை தருவதாக அறிவித்தது. இதுவரை எங் களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கவில்லை. குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி கார்த்தி கேயன் முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.24-க்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in