Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

ராமநாதபுரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் :

ராமநாதபுரத்தில் வீட்டின்முன் நிறுத்தி யிருந்த இரு சக்கர வாகனத்திலிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக மூவ ரிடம் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் புதுநாகநாதபுரம் பகுதியில் சிலர் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்குச் சென்று கேணிக்கரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகநாதபுரம் புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன் பகுதியில் இருந்த இருசக்கரவாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட் டிருந்த வீட்டுக்குள் இருந்த முகமது மீராஷாவின் மகன்கள் நியாஸ்கான் (40), முகமது ரிபாய்தீன் (38), முகமது ஜஹாங்கீர் (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதில் முகமது ஜஹாங்கீர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x