Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சிறப்பு மருத்துவ முகாம் :

வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் காந்தி நகர் ஈஸ்ட்டில் உள்ள வர்மா ஆயுர்வேதா மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைபெறுகின்றன. வேலூரில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஆயுர்வேத டாக்டர் கௌதமன் தலைமை தாங்கி, பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு நோய்கள் அறுவை சிகிச்சை இன்றி குணமாக்கப்படுகிறது. முதுகு தண்டுவட வலிகள், மூட்டு வலிகள், சைனஸ் பிரச்சினைகள், ஆஸ்துமா, சிறுநீரகக்கல் உறுப்பு செயலிழப்பு, கருமுட்டைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குடலிறக்கம் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’என்றார். மேலும், தொடர்புக்கு 95009 46633. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x