

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். பாத்திமா நகர் மீனவ பெண்கள் சிலர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நேற்று காலை மனு அளிக்க இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இரு தரப்பினரிடையே மோதல்
ஆட்சியர் அலுவலகத்தில் மனு