Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM

பர்கூரில் பேராசிரியையிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு :

பர்கூரில் கல்லூரி பேராசிரியை அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பி.ஆர்.ஜி.,மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதா (34). இவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 30-ம் தேதி இரவு, தன் இருசக்கர வாகனத்தில் பர்கூர் நகரில் உள்ள ஒரு வங்கியின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுஜிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகைளை பறித்துக் கொண்டு தப்பி யோடினார்.

இதுதொடர்பாக சுஜிதா பர்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x