சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி :

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி :
Updated on
1 min read

இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தொடங் கப்பட்டு 25 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, அக்.2-ம் தேதி முதல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்று வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் தலைமையில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் இருசக்கர வாகனங் களில் பேரணியாகச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங் கினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in