Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM

காவல்கிணறில் தந்தை கொலை: மகன் கைது :

பணகுடி அருகே காவல்கிணற்றைச் சேர்ந்த ராமசாமி (65) ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். காவல்கிணறு பூ மார்க்கெட் அருகே உள்ள அவரது ஆட்டு கொட்டகையில் நேற்று, அவர் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். பணகுடி போலீஸார் நடத்திய விசாரணையில் ராமசாமிக்கும், அவரது மகன் ரமேஷுக்கும் பணப் பிரச்சினையில் தகராறு ஏற்படுவது தெரியவந்தது. ரமேஷிடம் (36) விசாரித்ததில், தனது தந்தை ராமசாமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x