கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு விருப்பம் உள்ளோர் பங்கேற்க அழைப்பு :

கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு விருப்பம் உள்ளோர் பங்கேற்க அழைப்பு :
Updated on
1 min read

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெற உள்ளது, என நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.சிவரஞ்சன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. அதற்கான மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வுப் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நாளை (1-ம் தேதி) காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.

இத்தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பள்ளி உறுதிச் (போனபைடு) சான்றிதழ், வயது சான்றிதழ், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in