Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி உறுதி : சேலத்தில் கே.என்.நேரு நம்பிக்கை

சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசினார். உடன் மாவட்ட நிர்வாகிகள் எம்எல்ஏ ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர்.

சேலம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என சேலத்தில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வகணபதி (சேலம் மேற்கு), சிவலிங்கம் (சேலம் கிழக்கு), எம்பி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியதாவது:

வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினர் அனைவரும் ஒற்றுமையுடன் பணிபுரிய வேண்டும். மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்தலில் திமுக தலைவர் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பணிபுரிய வேண்டும்.

சேலத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ள நிலையில், தேர்தல் வெற்றி குறித்து யோசித்தேன்.

ஆனால், தொண்டர்களின் உற்சாகத்தைப் பார்த்ததும், திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்பதை உணர்ந்தேன். கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு செயல்படுத்துவது எனது பணியாகும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். சேலம் மாவட்ட திமுக மீண்டும் வலுவாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x