Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

மன்னார்குடி, காரைக்காலில் தேவர் ஜெயந்தி விழா :

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்தநாளை யொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக் கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்டோரும், அதிமுக சார்பில் மன்னார் குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக் கம், ஒன்றியக்குழுத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் மாவட்டத் தலை வர் ராகவன், சிஎஸ்.கண்ணன், சிவ.காமராஜ் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேச முக்குலத்தோர் நலச் சங்கம் சார்பில், காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற விழாவில், தேவரின் படத்துக்கு நிரவி-திருப்பட்டினம் எம்எல்ஏ எம்.நாகதியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் அய்யப்பன், துணைத் தலை வர் மருதமுத்து, பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், காரைக்காலைச் சேர்ந்த முக் குலத்தோர் அமைப்பினர் தேவர் படத்துக்கு மரியாதை செலுத் தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x