தலைமைக்காவலர் மனைவி கொலையில் - பிடிபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது :

தலைமைக்காவலர் மனைவி கொலையில் -  பிடிபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

உடன்குடி அருகே தனிப்பிரிவு தலைமைக் காவலரின் மனைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் உள்ளிட்ட இருவர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடன்குடி அருகேயுள்ள பெரியவன்தட்டைச் சேர்ந்தவர் செல்வமுருகன். திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக பணிபுரிந்தார். கடந்தாண்டு அக்டோபர் 1-ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அருணா (40) கடந்த மாதம் 30-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, செல்வமுருகனின் அக்காள் மகனான முத்துக்குமார் (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமர் (55) என்பவரை, ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீஸார்ற கைது செய்தனர். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பரிந்துரைப்படி, முத்துக்குமார், ராமர் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in