சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பாம்புகளுடன் வந்த காட்டு நாயக்கர்கள்.
சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பாம்புகளுடன் வந்த காட்டு நாயக்கர்கள்.

சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு - பாம்புகளுடன் வந்த காட்டு நாயக்கர்கள் :

Published on

சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்துக்கு காட்டு நாயக்கர்கள் மனு கொடுக்க பாம்புகளுடன் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மானாமதுரை அருகே பர்மா காலனியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காட்டு நாயக்கர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் காடுகளில் வேட்டையாடுவது, தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தனர். காலப்போக்கில் அவற்றுக்கு வனத்துறையினர் தடை விதித் ததால், தற்போது கூலித் தொழி லாளியாக பணிபுரிந்து வரு கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்று கேட்டு பல முறை மனு கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாதி சான்று வழங்க வலியுறுத்தி நேற்று பாம்புகளுடன் வந்து சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் களது கோரிக்கை குறித்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார். இதை யடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in