விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது :

விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டக் காவல் கட்டுப் பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு செல்போன் மூலமாக பேசிய நபர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், 10 நிமிடங்களில் வெடித்துவிடும் எனக் கூறிவிட்டு செல்போனா துண்டித்துள்ளார். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், போன் செய்த நபரைகண்டுபிடிக்கும் பணியை மேற்கொண் டனர்.

அப்போது போனில் பேசிய நபர், திண்டிவனத்தை அடுத்த கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது இருப்பிடத்திற்கு சென்று, அவரைபிடித்து அழைத்து வந்து விசாரித்துள்ளனர். விசாரணையில் மது போதையில் இருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததா கத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் மீதுபல்வேறு திருட்டு வழக்குகளும் உள்ள தால், அவரை போலீஸார் கைதுசெய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in