Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM

வந்தவாசியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் :

வந்தவாசியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

அரசு போக்குவரத்து கழக தொழி லாளர்களுக்கு தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் அறிவித்த தமிழக அரசை கண்டித்து சிஐடியூ சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2-வது பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பணிமனை தலைவர் எம்.பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தன்னிச் சையாக 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முழக்க மிட்டனர். கோரிக்கையை வலி யுறுத்தி மண்டலப் பொருளாளர் முரளி உரையாற்றினார். ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு நிர்வாகி உதயகுமார், தொழி லாளர்கள் முத்து, தாமோதரன், பாஸ்கர், பாபு, பஞ்சாட்சரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x