Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

பாஜக ஆர்ப்பாட்டம் :

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் பேரூராட்சி, குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி தெற்கு ஒன்றிய பாஜகதலைவர் முருகன் தலைமை வகித்தார். செந்தூர் பாண்டியன் வரவேற்றார். நிர்வாகிகள் ஜெய்சங்கர், ராமராஜா, சோலையப்பன், பாண்டித்துரை, அன்புராஜ், ராஜேஷ் ராஜா, ராமநாதன், முத்துக்குமார், பாலகுருநாதன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x