Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக - திமுக சார்பில் புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வானார் :

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள் அரசு பதிவேட்டில் கையொப்பமிட்டு பதவியேற்று கொண்டார்.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக திமுக சார்பில் புவனேஸ்வரிபெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆட்சியர் தர் தலைமையில் மாவட்ட திட்ட இயக்குநர் மணி முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மொத்தம் 19 பேரில், 13-வது வார்டு திமுக உறுப்பினர் புவனேஸ்வரிபெருமாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராகவும், 7-வது வார்டு திமுக உறுப்பினர் தங்கம் மாவட்ட ஊராட்சிக் குழுதுணை தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அஸ்வினி, சுகன்யா, ராஜேந்திரன், கோவிந்தராஜு, ஜெய்சங்கர், அகிலாபானுஅருள், முருகேசன், அலமேலு, வேல்முருகன், கலையரசி, பழனியம்மாள், ராஜேஸ்வரி, பிரியா, அமுதா, சுந்தரமூர்த்தி, வசந்தவேல் ஆகியோர் கலந்து கொண்டு தலைவர், துணைத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மஞ்சுளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x