Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள - 9 ஒன்றியக் குழு தலைவர்களாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்வு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியக் குழு தலைவர்களாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். நேற்று ஒன்றியக் குழு தலைவர் மற்றும்துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சிஒன்றிங்களில் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், துணைத்தலைவர்கள் விவரம்:

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அ.அஞ்சலாட்சி, துணைத் தலைவர் ச.தனம், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் இ.சாந்தி,துணைத்தலைவர்ஜெ.ராமலிங்கம், உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ப.ராஜவேல்,துணைத்தலைவர் கோ.இளங்கோவன், ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் சா.வடிவுக் கரசி, துணைத்தலைவர் அ.சென்னம்மாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் ந.தாமோதரன், துணைத்தலைவர் இரா.நெடுஞ்செழியன், சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் ந.திலகவதி, துணைத்தலைவர்கோ.அஞ்சலை, கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சி.சந்திரன், துணைத்தலைவர் ஜா.பாச்சாபீ, சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர்மா.சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் வெ.அன்பு மணிமாறன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் ஆ.அலமேலு, துணைத்தலைவர் மு.விமலா ஆகியோர்நேற்று பதவியேற்றுகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x