ஒரேநாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

ஒரேநாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கயத்தாறு காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் சங்கிலிபாண்டி (19), கோவில்பட்டி பங்களா தெரு பெருமாள் மகன் கோபி (35), கயத்தாறு காப்புலிங்கம்பட்டி மாடசாமி மகன் செல்வம் (39), மந்திதோப்பு முனியசாமி மகன் சேதுபதி (24) ஆகிய 4 பேரையும், தொழிலதிபர் ஒருவரை காரில் கடத்தி பணம், நகைகளை பறித்த வழக்கில் கயத்தாறு போலீஸார் கடந்த 9.9.2021-ல் கைது செய்தனர்.

இதேபோன்று, காட்டுநாயக்கன் பட்டி கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (25) என்பவரை, ஒரு கொலை முயற்சி வழக்கில் எப்போதும்வென்றான் போலீஸார் கடந்த 25.9.2021-ல் கைது செய்தனர். விளாத்திகுளம் ஆற்றங்கரை பெருமாள் மகன் சரத்குமார் (24) என்பவரை, விளாத்திகுளம் மகளிர் போலீஸாரும், தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு ஜேசுராஜா மகன் டால்வின்(35) என்பவரை தூத்துக்குடி மகளிர் போலீஸாரும் போக்ஸோ வழக்கில் கைது செய்தனர்.

மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பரிந்துரைப்படி, இவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in