நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 133-வது பிறந்த நாள் விழா :

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் நடைபெற்ற அவரது 133-வது பிறந்த நாள் விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மலர் தூவி மரியாதை செய்தார். அருகில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், டிஆர்ஓ துர்காதேவி.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் நடைபெற்ற அவரது 133-வது பிறந்த நாள் விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மலர் தூவி மரியாதை செய்தார். அருகில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், டிஆர்ஓ துர்காதேவி.
Updated on
1 min read

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் அவரது 133-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் கொள்ளு பேத்தி ரா.வித்யா சத்தியகிரி கவுரவிக்கப்பட்டார்.

இதையடுத்து நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாமக்கல் கவிஞர் புகைப்படம், வாழ்க்கை வரலாறு குறிப்புகள், அவரது நூல்கள் உள்ளிட்டவற்றை விழாவில் பங்கேற்றோா் பார்வையிட்டனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ர.சேகர், மாவட்ட நூலக அலுவலர் கோ. ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in