Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

கிருஷ்ணகிரியில் சூதாடிய 22 பேர் கைது :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 22 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 706-யை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் பணம் வைத்து சூதாடிய கும்பலைச் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் குப்பம் நவீன்குமார் (31), பாலமுருகன் (27), கொத்தூர் காதர்பாஷா (40) உள்ளிட்ட 16பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 706 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.இதேபோல் காவேரிப்பட்டணத்தில் 4 பேரையும், வேப்பனப்பள்ளியில் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x