நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா :

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா  :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா சிங் உள்ளார். கடந்த 2 நாட்களாக லேசான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதுபோல் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைய டுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்சியர் ஏற்கெனவே இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருந்தும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in