துரிஞ்சலாற்றின் பயணம் நூல் வெளியீடு :

திருவண்ணாமலையில் ‘துரிஞ்சலாற்றின் பயணம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ‘துரிஞ்சலாற்றின் பயணம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

எழுத்தாளர் க.ஜெய்சங்கரின் ‘துரிஞ்சலாற்றின் பயணம்’ எனும் நூல் வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.

சமூக ஆர்வலர் த.ம.பிரகாஷ் வரவேற்றார். நறுமுகை பதிப்பகத்தார் ஜெ.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி பல்கலைக் கழக மானிடவியல் துறைத் தலைவர் முனைவர் ஆ.செல்ல பெருமாள் ஆகியோர் நூல் குறித்த மதிப்புரைகளை வழங்கினார்.

பின்னர், துரிஞ்சலாற்றின் பயணம் எனும் நூலை வழக்கறிஞர் இரா.கார்த்தி வெளியிட, கமலநாதன், செல்வன் மற்றும் உதய குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தி.மலை வரலாற்று ஆய்வு நடுவம்செயலாளர் சா.பாலமுருகன், கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் வே.நெடுஞ்செழி யன், எழுத்தாளர் கு.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து, நூல் ஆசிரியர் க.ஜெயசங்கர் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை சிறகன் ஒருங்கிணைத்தார். இதில், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in