Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM
மத்திய அரசு நாட்டில் திறன்மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்யவதில் முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
கோவையில் தனியார் திறன் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பேசியதாவது:
சர்வதேச அளவில் திறன் மேம்பாடு என்பது அனைவரும் உத்வேகத்துடன் முயற்சி செய்து அடைய வேண்டிய ஒரு இலக்காக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்குவதுடன், வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வெவ்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
திறன் மேம்பாடு சார்ந்து தொடங்கப்படும் நிறுவனங்கள் மாணவர்கள், வேலையில்லா இளைஞர்கள், ஏற்கெனவே திறன் பெற்றவர்களுக்கு மேம்பட்ட திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்றே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மக்களவை தொகுதி உறுப்பினர் எம்.கே.ராகவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT