Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும் 19-ம் தேதி, கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி, மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT