Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM
கோவில்பட்டி: மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் குறித்து ஆசிரியர் ஜெயமீனா, உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பாதுகாப்பான உணவு வகைகள் குறித்து கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் பயிற்சியளித்தனர். விநாடி-வினாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பண்டங்களை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதிபாசு, தலைமை ஆசிரியர் ஜான்கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT