Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி :

மதுரை மீனாட்சி புத்தகக் கடை சார்பில், தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை ராமையா மஹாலில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.

இக்கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கண்காட்சியில், `இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் இயர் புக், தெற்கில் இருந்து சூரியன், அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவு உள்ளிட்ட அனைத்து புத்தகங்கள், பிற பதிப்பகங்களின் புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 17-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x