Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM
தமிழகத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சி பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நகர்ப்புறத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, சென்னையில் 2 மண்டலங்கள், மீதமுள்ள 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 மாவட்டத்துக்கு தலா ஒரு பேரூராட்சி என 37 பேரூராட்சிகளில் பரிட்சார்த்த அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தென்மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வருமாறு: திருநெல்வேலி மாநகராட்சியில்- மண்டலம் 4, நாகர்கோவில் மாநகராட்சியில்- வடக்கு மண்டலம், தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பேரூராட்சிகளை பொறுத்தவரை, திருநெல்வேலி- பணகுடி, தென்காசி- சுந்தரபாண்டியபுரம், தூத்துக்குடி- ஆத்தூர், கன்னியாகுமரி-கிள்ளியூர் ஆகிய பேரூராட்சிகளில் செயல் படுத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT