Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் 200 சிறப்பு பேருந்துகள் :

சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் வரும் 12-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை இயக்கப்படும். அதேபோல, நகர பகுதியில் மக்களின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x