Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்தில் இயங்கும் கடைகளில், முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் குமரேசன் (வருவாய்பிரிவு) கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் பேருந்து நிலையம், மரப்பாலம், சூரம்பட்டி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் வணிக வளாகங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகள் இடத்துக்கு ஏற்ப மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
வாடகை சரியாக செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு வாடகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு முறை நேட்டீஸ் பெற்றும், வாடகை செலுத்தாமல் அலட்சியம் காட்டினால், கடைகளைப் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT