Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

அரியலூரில் சிமென்ட் ஆலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆர்ப்பாட்டம் :

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் நேற்று ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெ.முருகன் தலைமை வகித்தார். ஏர் உழவர் சங்கம் மற்றும் தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா.இளவரசன் பேசினார். உழவர் சங்க பொதுச் செயலாளர் தியாக.இளையராஜா, மீத்தேன் எதிர்ப்பு தமிழ் மண்ணுரிமை இயக்க நிர்வாகி ஜெயராமன், தமிழ்த் தேச முன்னுரிமை இயக்க நிர்வாகி கி.நா.பணசை அரங்கரன், உலக திருவள்ளுவர் ஞான மன்றம் மகா.ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகள், உள்ளூர் மக்கள் வீடு கட்டுவதற்கு தேவையான சிமென்ட்டை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். விபத்தைத் தடுக்க சிமென்ட் ஆலைகளுக்கென தனிச் சாலை அமைக்க வேண்டும். சிமென்ட் ஆலை நிர்வாகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆலை நிர்வாகமே பொறுப்பேற்று, அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x