Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

வாழ்வாதாரத்துக்கு உதவி கேட்டு கரூர் ஆட்சியரிடம் பெண் மனு :

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கரூரை அடுத்த தாந்தோன்றிமலை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராணி, ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் அளித்த மனு:

எனது கணவர் மாணிக்கம் கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்தார். இவர், கடந்த செப்.19-ம் தேதி தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது அதிவேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

அவர் இறந்ததால், வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், எனது 3 பெண் குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தங்கியுள்ளேன். வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எனவே, எனது குடும்பத்துக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x