போதை சாக்லெட் விற்ற இளைஞர்கள் 2 பேர் கைது :

போதை சாக்லெட் விற்ற இளைஞர்கள் 2 பேர் கைது :
Updated on
1 min read

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நியூ திருப்பூர் அருகே நேற்று மாலை பெருமாநல்லூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் முபாரக்பூர் பகுதியை சேர்ந்த எஸ்.திரிலோகி சொங்கர் (27), ஜெ.கியாமுதின் (30) என்பதும், அதே பகுதியில்தங்கி அங்குள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைசெய்து வருவதும் தெரியவந்தது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து போதைமருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாகவாங்கி வந்து, நியூ திருப்பூர்பகுதியில் தங்கியுள்ள பின்ன லாடை தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லெட் ரூ.20 வீதம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து மூன்றரை கிலோ போதை சாக்லெட்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in