தொண்டி அருகே விபத்தில் தொழிலாளி மரணம்   :

தொண்டி அருகே விபத்தில் தொழிலாளி மரணம் :

Published on

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள முகிழ்தகம் ஏசுபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (58), கூலித் தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் தொண்டி உருளைக்கல் அருகிலுள்ள குளத்துக்குக் குளிக்கச் சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது சைக்கிள் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜேசுராஜ் உயிரிழந்தார். தொண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in