Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

நீட் தேர்வில் தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம்: ஜி.கே.வாசன் :

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதிலும் இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, நீட் தேர்வு போன்ற முக்கியமான பிரச்சினைகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்குத் தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x