Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

வாக்கு எண்ணிக்கை குறித்து நெல்லையில் ஆலோசனை :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையாட்டி, அதற்கான முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வை யாளர் ஜெயகாந்த், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகி யோர் தலைமையில் திருநெல்வேலி யில் நேற்று நடைபெற்றுது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் அமைத்தல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ராம்லால் (உள்ளாட்சி தேர்தல்), அசோக்குமார் (வேளாண்மை), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமாரதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x