Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

நாளை கரோனா சிறப்பு முகாம் - சேலத்தில் 2.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு :

‘சேலம் மாவட்டத்தில் நாளை (10-ம் தேதி) நடைபெறும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிசெலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியது:

சேலம் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 38, 33, 280 பேர்உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 27 லட்சத்து 98 ஆயிரத்து 294 பேர். இதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இது 61 சதவீதமாகும். மீதமுள்ள 10 லட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

இவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை (10-ம் தேதி) நடைபெறும் கரோனா தடுப்பூசிசிறப்பு முகாமில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சேலம் மாவட்டத்தில் 1392 இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.

இதற்காக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திடாதவர்களை கண்காணித்து அவர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அனைத்துத் துறையைச் சேர்ந்த 18,525 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை மறு நாள் நடக்கும் முகாமில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 5-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நாளை (10-ம் தேதி) நடக்கவுள்ளது. முகாமில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாமில், 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 84 நாட்கள் நிறைவடைந்திருந்தாலும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்திருந்தலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x