Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் :

திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு நாமக்கல், களங்கானி, ராசிபுரம் ஆகிய பகுதியிலிருந்து தொழிலாளர்களை பணிக்கு வேன் மூலம் ஆலைக்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேனில் வந்து கொண்டிருந்தனர்.

திருச்செங்கோடு அடுத்த திம்மராவுத்தன்பட்டி என்ற இடத்தில் வேன் திரும்பும்போது கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த தமிழ்செல்வி, புனிதவல்லி, தங்கமணி, சுந்தரி, ஆர்த்தி, கீதா, ராஜாமணி, நித்தியா, முத்துலட்சுமி, மலர்கொடி உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பலத்தகாடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக திருச்செங்கோடு ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x