நாமக்கல் மாவட்டத்தில் - மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு :

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கனமழை பெய்தது. இதில், பள்ளிபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி சத்யா நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

இதனிடையே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் மாவட்ட கண்காணிப்புஅலுவலரும், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலருமான தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார். அப்போது, மீட்பு பணிகள் நடைபெற்ற பகுதிகளில் மக்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், உடனடியாக சீரமைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in